Wednesday, May 28, 2014

ஸலாம் கூறுவோம்..!

நபி (ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம்) அவர்கள் (சபையோருக்கு அல்லது அயலார் வீட்டுக்குள் நுழைய அனுமதி கேட்டு) சலாம் கூறினால் மூன்று முறை சலாம் கூறுவார்கள். ஏதாவது ஒரு வார்த்தை பேசினால் (மக்கள் நன்கு விளங்கிக் கொள்வதற்காக) அதனை மூன்று முறை திரும்பச் சொல்வார்கள். 


அறிவிப்பவர்: (ரலியல்லாஹு அன்ஹு),


ஆதாரம்: ஸஹீஹூல் புகாரி, பாகம் 6, அத்தியாயம் 79, எண் 6244 

Sunday, May 25, 2014

அன்புள்ள முகநூல் சகோதரர்களுக்கு..!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்தஹு
அனைவருக்கும் இனிய மிஃராஜ் தின நல்வாழ்த்துகள்..!

1.மிஃராஜ் கூறும் படிப்பினைகள்..!
http://www.youtube.com/watch?v=J2MkazQf53U
 

2.ரஜப் நோன்பு எப்போது வைக்க வேண்டும்..?
http://youtu.be/FcgfRwdsmGo

Thursday, May 22, 2014

ஜும்மா நாள்..!

கண்மணி நாயகம் சல்லலாஹு அலைஹி வசல்லம் அன்னவர்கள் கூறினார்கள்: 

ஜும்மா நாளில் இமாம் சொற்பொழிவு நிகழ்த்தும்போது உன் அருகில் இருப்பவரிடம் நீ மெளனமாக இரு என்று கூறினாலும் நீ வீணான காரியத்தில் ஈடுபட்டுவிட்டாய்.

அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு)
புகாரி 934

Tuesday, May 20, 2014

மஹ்பூப் சுப்ஹானி முஹ்யித்தீன் அப்துல் காதர் ஜீலானி குத்தீஸ் ஸிர்ருஹு அவர்களின் நினைவு தின விழா..!

நாள்: 23-05-2014 வெள்ளிக்கிழமை முதல் 24-05-2014 சனிக்கிழமை இரண்டு நாட்களும் இரவு 9.00 மணி முதல் 12:30 மணி வரை
இடம்: கீரைகாரத் தெரு,திருவண்ணாமலை

உரை:
மெளலவி ஹாஃபிஸ் அல்ஹாஜ் சேக். M.அப்துல்லாஹ் ஜமாலி M.A. அவர்கள்
(முதல்வர், ஹைருல் பரிய்யா மகளிர் அரபிக்கல்லூரி, சென்னை)
(மாநிலத் தலைவர்,சுன்னத் ஜமாத் பேரியக்கம்)

பெண்களுக்கு தனி இடவசதி செய்யப்பட்டுள்ளது..!
அனைவரும் கலந்து கொண்டு பயன் பெருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Sunday, May 18, 2014

அன்பு(நேசம்)...!

அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவருக்கு அவருடைய தந்தை, அவருடைய பிள்ளை, ஏனைய மக்கள் அனைவரையும் விட நான் நேசத்திற்குரியவனாக ஆகாதவரை அவர் இறைநம்பிக்கை (ஈமான்) கொண்டவர் ஆக மாட்டார். 

அறிவிப்பாளர்: அனஸ் (ரலியல்லாஹு அன்ஹு)
நூல்: ஸஹீஹுல் புகாரி - 15

Wednesday, May 14, 2014

இஸ்லாமியர்களே உங்களையும் உங்கள் குடும்பத்தினைரயும் நரகத்தை விட்டும் காத்து கொள்ளுங்கள்..!

 இஸ்லாமியர்களே உங்களையும் உங்கள் குடும்பத்தினைரயும் நரகத்தை விட்டும் காத்து கொள்ளுங்கள்..!