Monday, October 28, 2013

புன்னகைத்தாலும் நன்மையே.!

உன்னுடைய சகோதரனுடைய முகத்தை பார்த்து நீ சிரிப்பது கூட உனக்கு நன்மையாகும் என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூதர் (ரலியல்லாஹு அன்ஹு), 

நூல் : முஸ்லிம் 4760

Tuesday, October 15, 2013

இனிய தியாக திருநாள் நல்வாழ்த்துகள்..!

சுன்னத் ஜமாத் பேரியக்கத்தின்
மாநில தலைவர்
ஹஜ்ரத் ஷேக் M.அப்துல்லாஹ் ஜமாலி அவர்களின்
இனிய தியாக திருநாள் நல்வாழ்த்துகள்..!

Monday, October 14, 2013

அரஃபா நாள் நோன்பு..!

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

அரஃபா நாள் நோன்பு அதற்கு முந்தைய ஆண்டு மற்றும் அதற்குப் பிந்தைய ஆண்டு பாவங்களுக்குப் பரிகாரமாகும். 

அறிவிப்பவர்: அபூகதாதா (ரலியல்லாஹு அன்ஹு), 

நூல் : முஸ்லிம் 1976

Sunday, October 13, 2013

குர்பானியின் சட்டங்கள்..!

குர்பானியின் சட்டங்கள் பற்றிய வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது அனைவரும் பார்த்து பயன்பெறுங்கள்.

http://youtu.be/N9eX9rHRgGM
http://youtu.be/3tC_fe4r6eU
http://youtu.be/01y8axuiEcg
http://youtu.be/eiZWN2gFmHQ

To read more, visit:
www.sheikjamali.blogspot.com
**************************************
Like Us: https://www.facebook.com/hajarathsheikabdullahjamali
**************************************
Google Group: www.groups.google.com/group/ahle-sunna
**************************************
Subscribe Us: www.youtube.com/sheikjamali786
**************************************

Saturday, October 12, 2013

அமுதகவி உமறுபுலவர் வாரிசுகள் இலக்கிய சங்க துவக்க விழா..!

சென்னை எழும்பூர் பைஸ் மஹாலில் மெளலவி ஹாஃபிஸ் அல்ஹாஜ் சேக். M.அப்துல்லாஹ் ஜமாலி M.A. அவர்கள்
(முதல்வர், ஹைருல் பரிய்யா மகளிர் அரபிக்கல்லூரி, சென்னை)
(மாநிலத் தலைவர்,சுன்னத் ஜமாத் பேரியக்கம்) தலைமையில் நடைபெற்ற அமுதகவி உமறுபுலவர் வாரிசுகள் இலக்கிய சங்க துவக்க விழா நிகழ்ச்சி நடந்தது.
விழாவில் சர்வதேச காயிதே மில்லத் பேரவை தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம். அப்துல் ரஹ்மான் உரை நிகழ்த்தினார் .உடன் மௌலவி சுப்ரிஷா பைஜி ,மௌலவி தாஹா மிஸ்பாயி,கவிஞ்ர்.மு .மேத்தா,கவிஞ்ர்.பத்ருதீன் ,புலவர் கமால் மொஹிதீன்,குமரி அபூபக்கர் ,முஸ்லிம் லீக் நிர்வாகிகள் கே .எம்.நிஜாமுதீன் ,பூவை முஸ்தபா.கவிஞ்ர் ஷைக் மதார் ஆமிரி ,வக்பு வாரியா உறுப்பினர் சிக்கந்தர்,மெஹ்தா பிள்ளை மரக்காயர்,கமால் முஸ்தபா, பூவை காதர்,சங்க தலைவர் ஹெஜ்.ரூமைசுதீன் பைஜி,திருச்சி மாவட்ட மணிச்சுடர் நிருபர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Tuesday, October 8, 2013

குர்பானி கொடுப்பவர் செய்யக் கூடாதவை..!

ஒருவர் குர்பானி கொடுப்பதற்காக முடிவு செய்துவிட்டால் அவர் துல்ஹஜ் மாதத்தின் முதல் பிறை கண்டது முதல் குர்பானி கொடுக்கும் வரை நகம் வெட்டக் கூடாது. முடிகளை நீக்கக் கூடாதுஎன்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கட்டளையிட்டார்கள்.

(அறிவிப்பவர் உம்மு ஸலமா (ரலியல்லாஹு அன்ஹு )
நூல் நஸயீ (4285)

Sunday, October 6, 2013

9-ம் ஆண்டு கூட்டு குர்பானி திட்டம்..!

சுன்னத் ஜமாத் பேரியக்கம் (SJP) - நாகூர் கிளையின்
9-ம் ஆண்டு கூட்டு குர்பானி திட்டம்..
அனைவரும் இணைந்து பயன் பெறுங்கள்..
ஒரு பங்கின் விலை ரூ.1500/-
 

Thursday, October 3, 2013

அஹ்லே சுன்னா..!

மார்க்க செய்திகளை பெற உடன இணைந்து வீடுவீர்..!
இந்த மின்னஞ்சல் குழுமத்தில்..

நபி ﷺ அவர்களின் சிபத்தும் சஹபாக்களின் வரலாறும் இமாம்களின் அறிவு களஞ்சியமும் வலிமார்களின் வாழ்வையும் காலத்தின் சூழ்நிலையையும் ஒவ்வொரு நாளும் நாம் அறிந்து கொள்ள ஒரு சிறு முயற்சியே இந்த மின்னஞ்சல் குழுமம்..
நம் குழுமம் குறித்து :http://groups.google.com/group/ahle-sunna
E-mail அனுப்ப வேண்டிய முகவரி: ahle-sunna@googlegroups.com

Tuesday, October 1, 2013

பெண் குழுந்தையின் சிறப்பு..!

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

"ஒருவருக்கு பெண் குழந்தை பிறந்து விட்டால் அந்த இடத்திற்கு அல்லாஹ் வானவர்களை அனுப்புகிறான். அவர்கள் அங்கு கூறுவார்கள்: "வீட்டில் உள்ளவர்களே! உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்" பின்னர் அக்குழந்தையை தன் இறக்கைகளால் அரவணைத்துக் கொள்கிறார்கள் மேலும் அதன் தலை மீது கரங்களால் தடவியவாறு கூறுகின்றார்கள் "இது ஒரு பலவீனமான ஆன்மாவாகும் இக்குழந்தையை பாதுகாத்து வளர்ப்பவருக்கு மறுமைநாள் வரையில் இறைவனின் உதவி கிடைத்துக் கொண்டே இருக்கும்"
அறிவிப்பாளர்: நபித்இப்னு ஷுரைத் (ரலியல்லாஹு அன்ஹு )
ஆதாரம்: அல்முஅஜமுஸ் ஸகீர்
ஹதீஸ் எண்: 243